கட்சித் தலைமை மற்றும் பதவிகளை சஜித்திற்கே வழங்க ரணில் இணக்கம்

கட்சித் தலைமை மற்றும் பதவிகளை சஜித்திற்கே வழங்க ரணில் இணக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் தொடர்ந்தும் இருக்க வாய்ப்பில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று(25) தெரிவித்துள்ளார்.

கட்சியானது இரண்டாக பிளவுபடுவதை தடுக்கும் வகையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக பொதுச்செயலாளர் மேலு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்கட்சித் தலைமை வழங்கக் கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருந்த போதிலும் எதிர்வரும் காலங்களில் அதனை மாற்றிக் கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.