புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு அறிமுகம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அலரிமாளிகைக்கு அருகே ஆர்.ஏ, டிமெல் மாவத்தையில் இலக்கம் 101 இல் இப்புதிய பொது மக்கள் தொடர்பாடல் பிரிவு நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.