எரிவாயு கசிந்து தீ விபத்து – 11 பேர் பலி

எரிவாயு கசிந்து தீ விபத்து – 11 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈரானில் திருமண விழா ஒன்றில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிவாயு கசிந்து பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.