கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(11) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(12) அதிகாலை 5 மணிவரை 7 மணித்தியாலங்கள் கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மிரிஹானை, எதுல்கோட்டை, பிடகோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல பகுததிகளுக்கு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.