வௌ்ளை வேன் சம்பவம் – இருவரும் இன்று நீதிமன்றில்

வௌ்ளை வேன் சம்பவம் – இருவரும் இன்று நீதிமன்றில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து ” வௌ்ளை வேன் ” சம்பவம் தொடர்பில் வௌிப்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அவர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்திருந்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.