நியூசிலாந்து எரிமலை வெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 9-ம் திகதி வெள்ளைத் தீவில் உள்ள எரிமலைகளில் ஒன்று திடீரென வெடித்ததில் அங்கு சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் பலர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பின்னர் மீட்புப் பணியினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரமான தீக்காயங்களுடன் 40-க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில், தீக்காயங்களுக்காக சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.