ஆபத்தான நிலையில் பயணி; கோட்டாபய விமான நிலையத்திற்கு விஜயம்

ஆபத்தான நிலையில் பயணி; கோட்டாபய விமான நிலையத்திற்கு விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த பயணி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சவுதியில் இருந்து இந்தோனேஷியா நோக்கி பயணித்த நிலையில், அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பின்னர், பயணி நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த பயணி இன்னமும் ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.அவர் பக்டீரியா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சற்று முன்னர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.