வனூட்டில் உள்ள எரிமலையிலிருந்து,வெடித்து சிதறும் தீப்பிழம்புகள்

வனூட்டில் உள்ள எரிமலையிலிருந்து,வெடித்து சிதறும் தீப்பிழம்புகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு பசிபிக் நாடான வனூட்டில் (vanautu) உள்ள எரிமலையிலிருந்து, தீப்பிழம்புகள்  வெளியாகியுள்ளன.

மலையின் சிறியது முதல் பெரியது வரையிலான துவாரங்கள் வழியே, உருக்கிய தங்கத்தைப் போன்று தீக்குழம்பை வெளியேற்றி வருகிறது. திடீரென மொத்தமாக வெடித்து சிதறிய பாறைகளில் ஏற்படும் வானுயர புகைமூட்டமும் அதில் படமாக்கப்பட்டுள்ளது.

டனா தீவில் உள்ள யசூர் மலைப்பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்ற ஒரு குடும்பத்தினர், ட்ரோனை கொண்டு எரிமலையில் இருந்து தீப்பிழம்புகள் வெடித்துச் சிதறும் காட்சிகளை படம் பிடித்துள்ளனர்.