கடமைகளை பொறுப்பேற்றார் விஜித ரவிப்பிரிய

கடமைகளை பொறுப்பேற்றார் விஜித ரவிப்பிரிய

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தனது கடமைகளை இன்று (24) பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை சுங்க திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.