எரிபொருளின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை

எரிபொருளின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைவடைந்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருளின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை(11) கூட உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் இன்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.