கொரோனா : சிவப்பு பிரதேசமாக பேருவளை

கொரோனா : சிவப்பு பிரதேசமாக பேருவளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா அபாயமிக்க “சிவப்பு பிரதேசமாக” களுத்துறை மாவட்டத்தில்  பேருவளை பிரதேசம் அடையாளமிடப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருன செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 135 பேர் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டமை அந்த பிரிவில் 206 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அவர்களில் 7 பேர் பேருவளை சுகாதார வைத்திய பிரிவினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.