கொரோனாவை கட்டுப்படுத்த நாம் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணானது : அனில் ஜாசிங்க

கொரோனாவை கட்டுப்படுத்த நாம் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணானது : அனில் ஜாசிங்க

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நாடாளாவிய ரீதியாக முன்னெடுத்த அனைத்து செயற்பாடுகளும் பலனின்றி காணப்படுவதாக சுகாதாரப்பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக தொற்றுப் பரவுவதை தடுக்கவே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. எனினும் பொதுமக்கள் அதனை பொருட்டாக கண்டுகொள்ளவில்லை. சட்டத்தை மதிக்கவில்லை. நமக்கு எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்காதவிடத்து நமது திட்டங்கள் எவ்வாறு பலனளிக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் ஏன் இவ்வாறு அலட்சியமாக இருக்கிறார்கள் என தெரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.