திருமலையில் மகனின் தாக்குதலினால் உயிரிழந்த தாய்

திருமலையில் மகனின் தாக்குதலினால் உயிரிழந்த தாய்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -திருகோணமலை – சம்பூரில் மகனின் தாக்குதலினால் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (04) சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தனவெட்டை பகுதியில்  சந்தனவெட்டை வீதியோரத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் 57 வயதான சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்பொழுது மூதூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்து சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், தாயார் மற்றும் அவரது மகன், மருமகள் ஆகியோர் சீதனவெளி பகுதியில் வசித்து வந்த நிலையில்  மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது மகனின் மனைவி  சந்தனவெட்டை, 64ஆம் கட்டை இதில் உள்ள அவரது தாயாரின் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை  தாயாருக்கு அருகில் தாக்குதல் நடாத்திய மகன் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம்  தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.