பங்களாதேஷ் நோக்கி விஷேட விமானம்

பங்களாதேஷ் நோக்கி விஷேட விமானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனாதொற்று காரணமாக பங்களாதேஷில் நிர்க்கதிக்குள்ளகியுள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இன்று(23) நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் பங்களாதேஷில் இருந்து யு.எல் 1422 என்ற விமானம் மூலம் இன்று மாலை 7.45 மணிக்கு நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாதொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.