அமெரிக்காவில் இலட்சத்தை தொடும் கொரோனா பலி

அமெரிக்காவில் இலட்சத்தை தொடும் கொரோனா பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில், கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 86 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் இதுவரை 55 இலட்சத்து 679 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களுள், 3 இலட்சத்து 46 ஆயிரத்து 721 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

23 இலட்சத்து 2 ஆயிரத்து 70 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.