நடிகை பாவனாவுக்கான வன்கொடுமை மீளவும் சர்ச்சையில்

நடிகை பாவனாவுக்கான வன்கொடுமை மீளவும் சர்ச்சையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – நடிகைகள் என்றாலே சினிமாவில் பல கஷ்டங்களை தாண்டி வாழ்க்கையில் முன்னேறுவதுதான். அந்தவகையில் சினிமாத்துறையிலேயே இருந்து சிலர் நடிகைகளுக்கு கொடுமைகள் செய்தும் வருகிறார்கள். அந்தவகையில் பாதிக்கப்பட்டவர் தான் நடிகை பாவனா.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. தீபாவளி, அசல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். கடந்த 2017ல் மர்ம நபர்களால் கடத்தி சென்று உடல்ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு யார் காரணம் என்று விசாரித்ததில் மலையாள நடிகர் திலீப் தான் என்று கண்டுபிடித்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள். சுமார் 85 நாட்கள் சிறையில் இருந்து ஜாமினில் வந்திருந்தார் திலீப்.

நடிகர் திலீப்பிற்கு எதிராக இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. பல பிரபலங்களிடம் விசாரணை நடந்ததில் திலீப்பிற்கு எதிராகவும் ஆதரவாகவும் 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் சினிமா நடிகையாக நடிகை ரம்யா நம்பீசனிடமும் சமீபத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட்டுள்ளது.

திலீப்பிற்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ரம்யா நம்பீசன் சார்பில் கூறப்படுகிறது. அப்படி குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் திலீப் சுமார் 7 ஆண்டு சிறைத்தண்டனையை வாழ்க்கையில் அனுபவிப்பார் என்று கூறப்படுகிறது.