நாட்டில் 2054 பேருக்கு கொரோனா

நாட்டில் 2054 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,054 ஆக அதிகரித்துள்ளது.

பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய மூவரும் பிரித்தானியாவிலிருந்து வந்த இருவரும் துபாயிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் நேற்று(01) தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,748 ஆக உயர்வடைந்துள்ளது.