கொழும்பில் 10 மணிநேர நீர் வெட்டு

கொழும்பில் 10 மணிநேர நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் நாளை(18) நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை(18) காலை 08 மணி முதல் மாலை 06 மணிவரையான காலப்பகுதிக்குள் கொழும்பு 13,14 மற்றும் 15 அகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 11,12 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் வழங்கும் குழாயின் திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.