ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து இலங்கைவாழ் முஸ்லிம்கள் கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கமானது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் அவர்களுடைய சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Capture