போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள்

போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் அனைவரின் பெயரையும் வெளியிட தயாராக இருக்கிறேன் என நடிகை ஸ்ரீரெட்டி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போன்ற நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருசில நடிகர் நடிகைகள் இந்த விவகாரத்தில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்களின் பெயர்களை தெரிவிக்க தயார் என்று தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

தெலுங்கானா அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் மற்றும் நடிகைகளின் பெயரை தெரிவித்த தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.