கொழும்பு தேசிய வைத்தியாலையின் மூன்று வார்ட்டுக்களுக்கு பூட்டு

கொழும்பு தேசிய வைத்தியாலையின் மூன்று வார்ட்டுக்களுக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜா-எல பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவருக்கு மாரடைப்பிற்கான சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நோயாளி ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வார்ட்டுக்களான 34, 35, 36 ஆகிய வார்ட்டுக்கள் முற்றாக மூடப்பட்டு அங்குள்ள அனைத்து நோயாளர்களும் அதனுள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.