வஸீமினது கைத்தொலைபேசி மெமரியிலிருந்து தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன

வஸீமினது கைத்தொலைபேசி மெமரியிலிருந்து தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன

றகர் வீரர் வஸீம் தாஜூடீனின் கைத்தொலைபேசி மெமரியின் உள்ளடக்கத் தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தாஜூடீனின் கைத்தொலைபேசி மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்த போதிலும், கைத்தொலைபேசியின் நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு, ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று(5) கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.

கைத்தொலைபேசி நினைவகத்திலிருந்து மீட்கப்பட்ட தகவல்கள் இறுவட்டு ஒன்றில் பதியப்பட்டுள்ளதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாஜூடீன் வாகன விபத்தில் உயிரிழக்கவில்லை மாறாக படுகொலை செய்யப்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் செல்லிடப் பேசியின் தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்துமாறு புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு ஆய்வு நடத்தி அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது.

இன்னும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கும் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புதிதாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பிரப்பித்த உத்தரவிற்கு அமைய புதிய அறிக்கை நேற்று திங்கள் கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

(riz)