கோட்டா – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

கோட்டா – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஜனாபதிபதி கோட்டாய ராஜபக்ஷவுடன் இருதரப்பு கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் இராஜதந்திர கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.