பிரித்தானியாவுக்கு 40 இற்கும் அதிகமான நாடுகள் விமானப் பயணத் தடை

பிரித்தானியாவுக்கு 40 இற்கும் அதிகமான நாடுகள் விமானப் பயணத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரித்தானியாவுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

புதிய வகை கொரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரித்தானியா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரித்தானியா உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை மக்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதேவேளையில், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.