ஆக்ஸ்போர்டு தடுப்பூசி நாளை நாட்டிற்கு

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி நாளை நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவிலிருந்து இன்று(27) இறக்குமதி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, நாட்டிற்கு நாளைய தினம் (28) இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடுப்பூசிகளை ஏற்றியிருக்கும் இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ஏ.ஐ.281 என்ற விமானம், நாளை(28) பகல் 11 மணியவிலேயே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக, இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.