மூன்று இராணுவத்தினர் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்

மூன்று இராணுவத்தினர் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra – Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இராணுவத்தில் முதலாவது தடுப்பூசி மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.