மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டது

மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் அடிப்படையில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை சுமார் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வௌியாகியிருந்தன.

எவ்வாறாயினும், குறித்த வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்ட முறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.