கடந்த 24 மணித்தியாலத்தில் 36,396 பேருக்கு தடுப்பூசிகள் 

கடந்த 24 மணித்தியாலத்தில் 36,396 பேருக்கு தடுப்பூசிகள் 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இதுவரை 95,550 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் 36,396 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.