செரமிக் உற்பத்தி இறக்குமதிக்கு அனுமதி

செரமிக் உற்பத்தி இறக்குமதிக்கு அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – செரமிக் உற்பத்திகள் தொடர்பில் நிலவும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இலங்கை ஏற்றுமதி – இறக்குமதி துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

இதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்ததுடன் அவற்றுள் செரமிக் உற்பத்தியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.