ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டம் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு வட மத்திய மாகாணத்தில் உள்ள மகா வெவ திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன துறையின் அபிவிருத்தி கிராமப்புற குளங்களை அபிவிருத்தி செய்தல் நாடுமுழுவதிலும் நீர்ப்பாசன கால்வாய்களை மேம்படுத்தல் மற்றும் தேசிய உணவு உற்பத்தியினை மேம்படுத்தல் ஊடாக வறுமையினை இல்லாதொழித்தல் இந்த திட்டத்தின் நோக்கமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.