மேலும் மூன்று தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஆய்வு

மேலும் மூன்று தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஆய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்19 ஒழிப்பிற்காக மேலும் மூன்று புதிய தடுப்பூசிகளை பெறுவதற்கான ஆய்வறிக்கை எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஆய்வறிக்கை கிடைத்ததன் பின்னர் நாட்டிற்கு பொருத்தமாக அமையும் வகையில் இருந்தால் மாத்திரம் இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.