உடல் அடக்கத்திற்கான அனுமதி வரவேற்கத்தக்கது

உடல் அடக்கத்திற்கான அனுமதி வரவேற்கத்தக்கது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா நோயால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றுள்ளார்.

“இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அளித்த உறுதிமொழியை வரவேற்கிறேன்” என்று பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 22ம் திகதி இலங்கைக்கு வருகை தந்து, பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.