ஐ.பி.எல் இறுதிப்பட்டியலில் யாழ்.இளைஞன்

ஐ.பி.எல் இறுதிப்பட்டியலில் யாழ்.இளைஞன்

(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) – இந்தியாவில் நடைபெறவுள்ள 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியில் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை வீரர்களின் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞம் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான விஜயகாந்த் -வியஸ்காந்த் என்பவரின் பெயரே இந்தப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

31 இலங்கை வீரர்கள் பதிவு செய்த போதிலும் அவர்களில் 9 வீரர்களே இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வீரர்களது இறுதிப்பட்டியல்;

குசல் பெரேரா, திஸர பெரேரா, கெவின் கொத்திகொட, மஹேஷ் தீக்சன, விஜயகாந்த் வியஷ்காந்த், துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக மற்றும் இசுறு உதான