பங்காளிக் கட்சிகள் இன்று கூடுகின்றன

பங்காளிக் கட்சிகள் இன்று கூடுகின்றன

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று(19) பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜே.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.