கொழும்புக்கு இன்று நீர்வெட்டு

கொழும்புக்கு இன்று நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் இன்று (20) காலை 8 மணி தொடக்கம் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை, கொட்டிகாவத்தை, முல்லேரியாவ, இரத்மலானை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.