இம்ரான் இலங்கைக்கு

இம்ரான் இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று (23) மாலை 4.15 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாலை 6 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதுடன், அதன் பின்னர் இருவரும் கூட்டறிக்கை வௌியிடவுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் நாளை(24) ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.