பயத்துடனேயே வாழ வேண்டிய நிலைமை – அமலாபால்

பயத்துடனேயே வாழ வேண்டிய நிலைமை – அமலாபால்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால்.

அமலாபாலும், பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து 2016-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டியில் நடிகை அமலாபால் விவகாரத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார்.

“நான் விவாகரத்து செய்து பிரிந்தபோது எனக்கு யாரும் ஆதரவு தரவில்லை. எல்லோரும் என்னை பயமுறுத்த முயற்சி செய்தனர். நான் முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது எனது மனநிலை பற்றியோ, எனது மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றியோ யாரும் கவலைப்படவில்லை” என்றார்.