பல்கலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

பல்கலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடன் நேற்று (02) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இதற்கு இணையாக மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறினார்.

பல கட்டங்களின் கீழ் 135,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.