கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் முறை

கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் முறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பதுடன் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையின் பிரதிகள், 16 தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறிபிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள்;

• சடலத்தை அடக்கம் செய்வதாயின் உறவினர்கள் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.
• சடலத்தை அடையாளம் காண இருவருக்கு மாத்திரமே அனுமதி.
• அடக்கம் செய்யப்படும் சடலங்கள் தினமும் மு.ப 5.30 க்கு இரணைத்தீவுக்கு எடுத்துச் செல்லப்படும்.
• சடலத்தை அடக்கம் செய்யும்போது புகைப்படம் எடுக்க காணொளி எடுக்க தடை.
• சடலம் உள்ள பெட்டியை திறக்க ஒருபோதும் அனுமதியில்லை.