புதிய நடவடிக்கைகள் ஜனாதிபதிக்கு சிக்கலாகுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து யோசனைகளை சமர்ப்பித்துள்ளது.

ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியாது என்ற 19வது திருத்தத்தின் விதிகளை அரசியலமைப்பில் இணைத்தல்.

சட்ட சபையின் பரிந்துரையின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநருக்கு மேலதிகமாக நாணயச் சபையின் ஏனைய உறுப்பினர்களை நியமித்தல்.

தேசிய முன்னுரிமைகள் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தை ஒரு சுயாதீன ஆணையமாக நியமித்து அதன் உறுப்பினர்களை சட்ட மேலவையின் பரிந்துரையின்படி நியமித்தல்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆளுங் கட்சியின் அனைத்து அலுவலகப் பணியாளர்களும் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவதைக் கட்டாயமாக்குதல். அவ்வாறு செய்யத் தவறினால் கடுமையான தண்டனைகளுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல்.