கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கப்பட்ட இரண்டு புதிய நியமனங்கள்!

நாகராசா மணிவண்ணன், A  மன்சூர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த திரு.A. மன்சூருக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின்  பதில் செயலாளராகவும் நியமிக்க  பிரதம செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்டது.

அப்பரிந்துரையை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால்  இருவருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.