
மேலதிக பயிர்களுக்கு 15,000/- மானியம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.