ராஜித தாக்கல் செய்த தாக்கல் செய்த முன்பிணை மனு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனு கொழும்பு பிரதான நீதவானால் இன்று(20) நிராகரிக்கப்பட்டுள்ளது.

ராஜித நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ——————————————— UPDATE

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு விவகாரத்தில் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை நேற்று(19) தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு குறித்த வழக்கு விசாரணைக்காகவே அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.