(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எந்தவொரு மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்த வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகிய நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.