உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரேனா ஒழிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பினூடாக தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நன்றி தெரிவித்ததாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.