வெலிசர கடற்படை முகாமில் மேலும் 30 பேருக்கு கொரோனா (UPDATE)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – வெலிசர கடற்படை முகாமில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெலிசர கடற்படை முகாமில் நேற்று மற்றும் இன்று மேற்கொள்ளப்பட்ட  பிசிஆர் பரிசோதனைகளில் 60 பேருக்குகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனம் காணப்பட்டுள்ளதான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளைய தினமும்  பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.