மின்சார சபைக்கு 181.5 பில்லியன் நட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையில் 181.5 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தித்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 85.4 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.