பாராளுமன்றுக்கு இரு நாட்கள் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என பிரதிப் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய இன்றும் நாளையும் பாராளுமன்றம் மூடப்படவுள்ளதோடு பாராளுமன்ற வளாகம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகள் எதுவும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.