உமாஓயா பற்றிய அமச்சரவை உபகுழு இன்று பதுளையில் கூடவுள்ளது

உமாஓயா பற்றிய அமச்சரவை உபகுழு இன்று பதுளையில் கூடவுள்ளது

உமா ஓய வேலைத் திட்டம் குறித்து ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் அதனை செயற்படுத்துவது குறித்தும் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு  இன்று பதுளை கச்சேரியில் கூடவுள்ளது. இதன்போது, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இக்குழுவில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மஹிந்த அமரவீர மற்றும் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.