முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினது குற்றப்பத்திரிகை இன்று வாசிப்பு…

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினது குற்றப்பத்திரிகை இன்று வாசிப்பு…

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் தொடர்பிலான குற்றப்பத்திரிகை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று(25) வாசிக்கப்பட்டது.

கடந்த கால ஆட்சியில் பிரியங்கர ஜயரத்ன, சிவில் வானுர்தி சேவை அமைச்சராக செயற்பட்ட போது இல்லாத பதவியொன்றுக்கு வேதனம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று(25) இந்த குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்நிலையில் குறித்த இருவரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

(rizmira)